உள்ளூர் செய்திகள்
பெஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
- ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
- மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார்கள்.
மார்த்தாண்டம் :
கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. பள்ளித்தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். இயக்குநர் இலக்கியா, முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணைமுதல்வர் முன்னிலை வகித்தனர், கவுரவ விருந்தினர்களாக வெள்ளறடை ஆர்.எம். தேவி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் மோகன், தென்காசி எஸ்.எம்,ஏ கல்விக்குழுமத்தின் இயக்குனர் டாக்டர் ராஜ்குமார், கரிக்ககம் ஸ்ரீ குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் டைட்டன்ஸ், ஒலிம்பியன்ஸ், ஸ்பார்டன்ஸ் என மூன்று குழுக்களாகப் பிரிந்து அத்தப்பூ கோலமிட்டார்கள். மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.