உள்ளூர் செய்திகள்
குளச்சல் அருகே திருமணமான 12-வது நாளில் புதுப்பெண் மாயம்
- கடந்த 14-ந் தேதி திருமணம் நடந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே வாணியக்குடி வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சிந்துஸ்டன் குமார் (வயது 31). கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் களியக்காவிளையை சேர்ந்த மேரி ஜாஸ்மின் (19) என்பவருக்கும் கடந்த 14-ந் தேதி திருமணம் நடந்தது.
கடந்த 25-ந் தேதி இரவு இருவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர். மறுநாள் காலை சிந்துஸ்டன்குமார் எழுந்து பார்க்கும்போது மேரி ஜாஸ்மினை காணவில்லை. உடனே அவர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. திருமணமான 12-வது நாளில் புதுப்பெண் மாயமாகி இருந்தார்.
இதுகுறித்து சிந்துஸ்டன் குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் மேரி ஜாஸ்மினை தேடி வருகின்றனர்.