உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் ஓண விழா

Published On 2023-08-30 12:44 IST   |   Update On 2023-08-30 12:44:00 IST
  • பேராய செயலாளர் வக்கீல் தினேஷ் கலந்து கொண்டார்
  • சுமார் 600-க்கும் மேல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு நடத்தி பெரிய சாதனை

தக்கலை :

மார்த்தாண்டம் அருகே விரிகோடு சி.எஸ்.ஐ பேரா யத்தின் கீழ் செயல்படும் வேதமாணிக்கம் தெழில்நுட்ப கல்லூரியில் 2023-ம் ஆண்டு ஓணம் பண்டிகை கல்லூ ரியில் வைத்து நடந்தது.ஆசிரியர்களின் கூட்டு முயற்சியின் காரணமாக இக் கல்லூரியில் மினி மாரத்தான் சுமார் 600-க்கும் மேல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு நடத்தி பெரிய சாதனை படைத்துள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சி.எஸ்.ஐ பேராய செயலர் வக்கீல் தினேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார். மற்றும் கல்லூரி தாளாளர் சதீஷ் கல்லூரி முதல்வர் அனில் குமார் மற்றும் கல்லூரியில் பணி புரியும் ஆசிரி யர்கள் மாணவர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் வடம் இழுத்தல், உறியடி, திருவாதிரை, என அநேக நிகழ்வுகளுடன் மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News