உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

Published On 2022-10-14 13:45 IST   |   Update On 2022-10-14 13:45:00 IST
  • பேரனை கடமலைகுன்று பள்ளியில் கொண்டு விடுவதற்காக சென்றபோது விபத்து
  • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

தக்கலை அருகே மருவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் பாகுலேயன் (வயது 60), முடிதிருத்தும் தொழிலாளி.இவர் நேற்று காலை பேரனை கடமலைகுன்று பள்ளியில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது தக்கலை அருகே சாமிவிளை பகுதியில் செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாகு லேயனை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பாகுலேயன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் அஜிகுமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளில் விபத்தை ஏற்படுத்திய குழிச்சல் பகுதியை சேர்ந்த ஜாண்சன் (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News