உள்ளூர் செய்திகள்

வெள்ளிச்சந்தை அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2023-07-17 12:01 IST   |   Update On 2023-07-17 12:01:00 IST
  • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு வீட்டின் முன்புள்ள மாமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை
  • புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி :

வெள்ளிச்சந்தை அருகே பெரும் செல்வ விளையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் வந்து தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்றும் அவர் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததால் சிவக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு வீட்டின் முன்புள்ள மாமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சிவகுமாரின் மகன் சுபின் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News