உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று அர்ஜூன் சம்பத் உருவ பொம்மை எரிப்பு

Published On 2022-07-04 09:58 GMT   |   Update On 2022-07-04 09:58 GMT
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
  • தொல்.திருமாவளவனை அர்ஜூன் சம்பத் அவதூறாக பேசியதாக கண்டனம்

நாகர்கோவில்:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இன்று அர்ஜூன் சம்பத் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். கோபி, பாபு, ஜோஸ்பின், ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்தியதாக திருமாவேந்தன் உள்பட 10 பேரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News