உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

நாகர்கோவிலில் கம்யூட்டர் சென்டர் அதிபர் திடீர் சாவு

Published On 2022-11-14 09:52 GMT   |   Update On 2022-11-14 09:52 GMT
  • தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
  • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் செட்டிக்குளம் கே.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 52).

இவர் நாகர்கோவில் செட்டிகுளத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது பற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்தது யார்? என்பது பற்றி நாகர்கோவில் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து கிடந்தது அருண் பிரகாஷ் என்பது தெரியவந்தது.

அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் தண்டவாளத்தில் கிடந்த உடலை அடையாளம் காட்டி இறந்தது அருண் பிரகாஷ் தான் என்பதை உறுதி செய்தனர். அருண் பிரகாஷ்,ரெயில் மோதி இறந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர் பறக்கங்கின் கால் பகுதிக்கு சென்றது ஏன்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News