உள்ளூர் செய்திகள்

அருமனை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை

Published On 2022-09-23 09:34 GMT   |   Update On 2022-09-23 09:34 GMT
  • தாயின் கள்ளக்காதலன் - பாட்டி மீது வழக்கு
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் அருமனையை அடுத்த பத்து காணியை சேர்ந்த ஒரு பெண், கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் 15 வயது மகள் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகள்-மகன்கள் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்தநிலையில் அந்தப் பெண்ணுக்கு கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த டிஜேஷ் என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தனது குழந்தைகளுடன் அந்தப் பெண், டிஜேசுடன் சேர்ந்து வாழ்ந்து உள்ளார்.

ஆனால் சில நாட்களில் அந்தப் பெண் வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் அவரது குழந்தைகள், பாட்டி மற்றும் டிஜேஷ் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் டிஜேஷ், 15 வயது சிறுமியான மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனை சிறுமி தனது பாட்டியிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

இதற்கிடையில் சிறுமிக்கு டிஜேஷ் பாலியல் தொல்லை கொடுப்பது அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்திற்கு தகவல் கொடுத் தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி மாணவி யின் பாட்டி மற்றும் டிஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News