உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

கல்லால் தாக்கியதில் பெண் படுகாயம்

Published On 2022-12-07 10:08 GMT   |   Update On 2022-12-07 10:08 GMT
  • குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதி
  • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி கடம்பற விளையைச் சேர்ந்தவர் ஜெனிஷா (வயது23). இவர் லேப் டெக்கரேஷன் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

சம்பத்தன்று வெட்டு மணியில் உள்ள குருசடிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அதே பகுதியைச் சேர்ந்த விஜய லட்சுமி ஏளனமாக பேசி தகராறு செய்ததாகவும் அவர் கல்லால் தாக்கிய தில் தலையில் காயம் அடைந்ததாகவும் மார்த்தாண்டம் போலீசில் ஜெனிஷா புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜெனிஷா குழித்துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

Tags:    

Similar News