உள்ளூர் செய்திகள்

புதுக்கடை பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

புதுக்கடையில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி

Published On 2023-01-25 07:00 GMT   |   Update On 2023-01-25 07:00 GMT
  • பொதுமக்கள் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
  • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிக்கை

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்க ளான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக் கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக் கப்பட்டதை நேரில் பார்வை யிட்டது.

இன்னுயிர் காப்போம் நம் மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம். கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினருக்கு நில உரிமை ஆணை வழங்கி யது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலை யங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவி னர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது.

முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின் சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களில் பணியின்போது கால மானவர்களின் வாரிசுதா ரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இல வச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி யினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப் படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News