உள்ளூர் செய்திகள்

விபத்தில் பாதிக்கப்பட்டவரை படத்தில் காணலாம் 

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்

Published On 2023-02-10 10:12 GMT   |   Update On 2023-02-10 10:12 GMT
  • 3 பேர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம்
  • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் குழிக்கோடு பகுதியை சேர்ந்த வினு (வயது 34), கப்பியறை பகுதியைசார்ந்த ஆகாஷ் ( 23), குழிக்கோடு ஜனசிலின் ஆகிய 4 பேரும் ஓரு மோட்டார் சைக்கிளில் குழித்துறை தியேட்டரில் இருந்து படம் பார்த்து விட்டு மார்த்தாண்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் வந்த போது அங்கு நிறுத்தி விட்டிருந்த லாறி பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரையும் திருவனந்தபுரம் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடை பெற்று வருகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News