உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

ராஜாக்கமங்கலம் அருகே மனைவி பிரிந்த வேதனையில் தற்கொலை செய்த தொழிலாளி

Published On 2023-01-02 08:10 GMT   |   Update On 2023-01-02 08:10 GMT
  • உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
  • ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன் என்ற கண்ணன் (வயது 41).

இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு அழுகிய நிலையில் அழகேசன் உடல் தூக்கில் தொங்குவது தெரியவந்தது.

இதுபற்றி உடனடியாக ராஜாக்கமங்கலம் போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அழகேசன் உடல், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அழகேசன் தற்கொலை க்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசா ரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

வெல்டிங் தொழிலாளி யான அழகேசனுக்கு திரும ணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான அவர், அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

இதனால் அழகேசனின் மனைவி, தனது குழந்தை களுடன், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்து வருகிறார். இது அழகேசனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த வேதனையில் தான் அழகேசன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடை பெற்று வருகிறது.

Tags:    

Similar News