உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அருகே குளத்தில் மூழ்கி சிறுவர்கள் பலியானது எப்படி?

Published On 2022-12-19 10:35 GMT   |   Update On 2022-12-19 10:35 GMT
  • ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
  • உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராபின் இவரது மகன் ஆல்வின் ராஜ் (வயது 10).

ஆசாரிபள்ளம் நடு தெருவை சேர்ந்தவர் ஹர்ஜோன் (10). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் ஆல்வின்ராஜ், ஹர்ஜோன் இருவரும் அவருடைய நண்பர் இம்மானுவேல் (10) என்பவருடன் அந்த பகுதியில் சுற்றி திரிந்தனர். மதியம் அந்தோணியார் ஆலயம் பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றனர்.

ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் குளத்தில் இறங்கி மீன் பிடித்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி னார்கள். இதையடுத்து பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆல்வின் ராஜ் ஹர்ஜோ னை பரிசோ தித்த டாக்டர்கள் இருவ ரும் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

இது குறித்து ஆசாரிப்பள் ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆல்வின் ராஜ் ஹர்ஜோன் பலியானது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் திடுக்கிடும் தகவல் கள் வெளியாகி உள்ளது. தண்ணீரில் மூழ்கி பலி யான ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் குளத்தின் கரையில் நின்று மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் மீன்கள் சிக்க வில்லை.

இதையடுத்து குளத்திற் குள் இறங்கி அவர்கள் மீன் பிடித்தனர். அதன்பிறகும் மீன் சிக்காததால் தண்ணீ ருக்குள் இறங்கி சென்றனர். அப்போது கரையில் இருந்த இம்மானுவேல் ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.அதற்குள் ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் தண்ணீ ரில் மூழ்கி உள்ள னர். இதை பார்த்த இம்மானு வேல் கூச்சலிட்டு உள்ளார்.

அப்போது அந்த பகுதி மக்கள் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. பலி யான ஆல்வின் ராஜ், ஹர் ஜோன் உடல் பிரேத பரிசோ தனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு உள்ளனர்.

Tags:    

Similar News