- தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
- பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் வரலாறு, சாதனை பட்டியல் சிறப்பு தொகுப்பாக வழங்கப்பட்டது.
தேனி:
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் காமராஜ் பவனில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை பேராசிரியர் அசோக்ராஜ், வடுகபட்டிபேரூராட்சி துணைத்தலைவர் அழகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அதன்பின் கருணை இல்ல குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், ஏழைப்பெண்களுக்கு சேலைகள், போர்வைகள் வழங்கப்பட்டன.
காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் வரலாறு, சாதனை பட்டியல் சிறப்பு தொகுப்பாக வழங்கப்பட்டது. தேனி நாடார் பள்ளியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து உறவின்முறை தலைவர் ராஜ்மோகனிடம் சாதனை பட்டியல் வழங்கப்பட்டது.
சுக்காங்கால்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய கிராமபள்ளிகளுக்கும் நேரடியாக சென்று காமராஜர் சாதனைபட்டியல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கம்பம் மனோகரன், கண்ணுச்சாமி, மெல்வின், கணேஷ்மிஷ்ரா, முருகன், கஜேந்திரன், வசந்தம் சுப்புராமன், ஈஸ்வரன், ஹக்கீம், ஆரோக்கியராஜ், ராமகிருஷ்ணன், மகாராஜன், போடி ஹரிகரன், பாலையா, ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.