உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை திருட்டு

Published On 2023-02-02 10:01 GMT   |   Update On 2023-02-02 10:01 GMT
  • கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
  • திருடர்களை தேடி வருகின்றனர்.

கோவை,

கோவை கருமலை செட்டிப்பாளையம் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 55). இவர் நூற்பாலை உதிரி பாகம் விற்பணையாளராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைவாக இடத்தில் வைத்து வேலைக்கு சென்றார். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ரமேஷ்குமாருக்கு போன் செய்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதாக தெரிவித்தார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த மேஜையின் லாக்கரை உடைத்து இதில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் வீட்டு பத்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

அப்போது ராஜேஷ் மற்றொரு வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார். அங்கு 4½ பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. பின்னர் இதுகுறித்து ரமேஷ்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்த வீடுகளில் நகைகளை கொள்ளை அடித்த திருடர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News