உள்ளூர் செய்திகள்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு கள ஆய்வு அட்டை வழங்கப்பட்டது.

வீடு கட்டும் பயனாளிகளுக்கு ஆய்வு அட்டை வழங்கல்

Published On 2022-07-22 08:32 GMT   |   Update On 2022-07-22 08:32 GMT
  • வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் 502 பயனாளிகளில் 382 பயனாளிகளுக்கு கண்காணிப்பு அட்டை வழங்கினார்.
  • வீடு மற்றும் கழிப்பறையை முறையாக பராமரித்து ஆரோக்கியமான வாழ்வை வாழ அறிவுறுத்தினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் ஒன்றிய த்தில் பாரத பிரதமர் ஊரக குடியிருப்பு திட்ட த்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்குநாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கள ஆய்வு அட்டை வழங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வேதார ண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமலிங்கம், பாஸ்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கருணாநிதிஆகியோர் கலந்துகொண்டு கத்ததிரி புலம், ஆதனூர், கருப்பம்புலம் ,குரவப்புலம், உள்ளிட்ட 36 ஊராட்சிகளில் 21- 22 ம் ஆண்டு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் 502 பயனளிகளில் 382 பயணாளிகளுக்கு கண்காணிப்பு அட்டை வழங்கினர். வீடு மற்றும் கழிப்பறையை முறையாக பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வை பெற எனவும், திட்டத்தில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் ஊரக வளர்ச்சி இயக்கம் குறைய தீர்ப்பு மைய தொடர்பு எண்கள் 8925422215, 8925422216 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News