உள்ளூர் செய்திகள்

ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.

கொள்முதல் நிலையங்களில் நெல்லை காய வைக்கும் எந்திரம் அமைக்க வலியுறுத்தல்

Published On 2022-10-07 06:46 GMT   |   Update On 2022-10-07 06:46 GMT
  • நெற்கதிர்களை அறுத்து காய வைக்க எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் உலர்த்தும் தளம் இல்லை.
  • பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளிலும் நெற்களை காயவைப்பதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

வேதாரண்யம்:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி ஒரளவு மகசூல் கிடைத்துள்ளது.

இதனால் விவசாயிகள் தங்கள் நெல்லை அறுத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது அதிக ஈரபதத்துடன் நெல் உள்ளது என்று திருப்பி அனுப்ப படுகின்றனர்.

வேதாரண்யம் பகுதி விவசாயிகள் தங்களது நெற்கதிர்களை அறுத்து காய வைக்க எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் உலர்த்தும் தளம் இல்லை.

எனவே விவசாயிகள் நெல்மணிகளை கிராமபுறம் உட்பட பல்வேறு இடங்களில் பிரதான போக்கு வரத்து சாலைகளில் கொட்டி காய வைக்கின்றனர்.

தற்போது பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளிலும் நெற்களை காயவைப்பதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

சில நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் விவசாயிகளுக்கு சிறு பிரச்சனைகள் நடக்கிறது.

எனவே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் தூற்றும் மிஷின் இருப்பது போல நெல் காயவைக்கும் மிஷின்களை (டிரையர்) அரசே ஏற்று அமைத்து ெகாடுக்க வேண்டும்.

விவசாயிகள் கொண்டுவரும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்த நெல்லை கொள்முதல் செய்துவிவசாயிகள் நலன்காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News