இந்திராகாந்தி சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி. அருகில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளார்.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா - தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு
- இந்திரா காந்தி உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- மழை பெய்த போதிலும், குடை பிடித்தபடி காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கொண்டா டப்பட்டது. இதனையொட்டி நெல்லை வண்ணார் பேட்டையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவல கம் முன்பு உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணி விக்கப்பட்டது. மழை பெய்த போதிலும், குடை பிடித்தபடி காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பிறந்தநாள் விழா கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சிகளில் வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர் வக்கீல் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முரளிராஜா, மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட பஞ்சா யத்து ராஜ் தலைவர் தனசிங் பாண்டியன், நிர்வாகிகள் உதயகுமார், கவிபாண்டியன், மகேந்திரன் உட்பட காட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.