உள்ளூர் செய்திகள்
பெசன்ட் நகர் கடற்கரையில் 77வது சுதந்திர தின விழா கோலாகலம்
- சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
- நாடு முழுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மீடியா95 பழனிராஜா மற்றும் குரூப் அட்மின் மோகன் ராகவன் தலைமையில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அடையார் ஆனந்தபவனின் நிர்வாக இயக்குநர் திரு. வெங்கடேஷ் ராஜா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் பீச் ஃப்ரெண்ட்ஸ் குரூப் உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.