உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2022-06-27 09:22 GMT   |   Update On 2022-06-27 09:22 GMT
  • நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
  • அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 905 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,672 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 905 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News