உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சையில், நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் - கலெக்டர் தகவல்

Published On 2022-06-30 10:01 GMT   |   Update On 2022-06-30 10:01 GMT
  • கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத்துறை, தோட்டகலைத்துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
  • விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத்துறை, தோட்டகலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News