உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அரசு வழங்க வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், மாற்றுத்தி றனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அரசு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்டத் துணைச் செயலா ளர்கள் ராஜன், சாமியப்பன், ராதிகா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில் மாற்றுத்திறனா ளிகள் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.