உள்ளூர் செய்திகள்

சூளகிரி ஒன்றியத்தில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கள பயிற்சி

Published On 2022-07-26 15:23 IST   |   Update On 2022-07-26 15:23:00 IST
  • வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்க ளுக்கு திட்டம் மற்றும் வள பயிற்சி நடைபெற்றது.
  • இதில் 39 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சூளகிரி,

சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சியில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்க ளுக்கு திட்டம் மற்றும் வள பயிற்சி நடைபெற்றது. இதில் 39 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியில் அந்தந்த ஊராட்சி மன்றத்தில் உள்ள அனை த்து பணிகளிலும் சார்ந்து பணியாற்ற வேண்டும். பொதுவாக துய்மை ,சுகாதாரம், குடிநீர் வசதி, மற்றும் வீட்டு வரி ,குடிநீர் வரி, டெங்கு, கொரோனா மற்றும் வியாதிகள் பரவாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு முன் உதாரணமாக செயல்பட வேண்டும் என வலியுருத்தினர். இந்த கூட்டத்திற்கு துணை பி.டி.ஒ.க்கள் சண்முகம், உமாசங்கர், முகிலன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டென்சிங், முருகன், காமராஜ், கணகராஜ், சரவணன், ஆகியோர் பஙகேற்றனர்.

Tags:    

Similar News