உள்ளூர் செய்திகள்
பாண்டமங்கலத்தில் கிரிக்கெட் போட்டி தொடங்கி வைக்கப்பட்டபோது எடுத்த படம்.
பாண்டமங்கலத்தில்கிரிக்கெட் போட்டி தொடக்க விழா
- பாண்டமங்கலம் பி.சி.எப் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
- பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணைத் தலைவரும், பேரூர் நகர செயலாளருமான பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பி.சி.எப் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டியை கபிலர்மலை தி.மு.க ஒன்றிய செயலாளரும், அட்மாகுழு தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான சண்முகம், பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணைத் தலைவரும், பேரூர் நகர செயலாள ருமான பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், பேரூர் தி.மு.க பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.