உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அருகில் நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணிவண்ணன் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளார்.

நெல்லிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சி.வெ‌ கணேசன் வழங்கினார்

Published On 2022-07-02 08:18 GMT   |   Update On 2022-07-02 08:18 GMT
  • நெல்லிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் அமைச்சர் சி.வெ‌ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
  • நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்று விழா நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்றது. இதற்கு நகர திமுக செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். இதில் நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், நகர அவைத் தலைவர் ஷேக் மொய்தீன், துணைச் செயலாளர் பார்த்தசாரதி, மூத்த நிர்வாகி வேலு, இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன், துணை அமைப்பாளர் மாருதி ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் கவுன்சிலர்கள் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News