பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
நாகையில், பேரிடர் மீட்பு ஒத்திகை போட்டி
- மணல்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட 14 தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் வெற்றி பெறும் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகை மற்றும் மயிலாடு துறை மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு இடைய பேரிடர் மீட்பு ஒத்திகை போட்டி நடைபெற்றது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கிடைக்கும் பொருட்களை கொண்டு மீட்பு பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த போட்டி நாகை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமையில் நடைபெற்ற போட்டியில், நாகை- மயிலாடுதுறை மாவட்டங்க ளை சேர்ந்த நாகை, கீழ்வேளூர், தரங்கம்பாடி, மணல்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட 14 தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் இருக்கும் இடத்தில் கையில் உள்ள பொருட்களை கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
4 நாட்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.