உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில்இளம்பெண்கள் 3 பேர் தற்கொலை

Published On 2023-04-05 15:30 IST   |   Update On 2023-04-05 15:30:00 IST
  • எங்கு சிகிச்சை பார்த்தும் வயிற்று வலி சரியாகவில்லை.
  • கணவன் மனைவிக் கிடையே அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரித். இவருடைய மனைவி கீதா (வயது 31). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கீதா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.எங்கு சிகிச்சை பார்த்தும் வயிற்று வலி சரியாகவில்லை.

இதனால் மன விரக்தியில் இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் ஆட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் பெரியமன வாரனப் பள்ளி அருகே உள்ள கங்கா மேடு பகுதியை சேர்ந்தவர் திம்மராஜ். இவருடைய மனைவி தீபா (எ) தேவம்மா (வயது22). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிய நிலையில் 3 குழந்தைகள் உள்ளது. கணவன் மனைவிக் கிடையே அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட தீபா கங்கா மேடு பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் தேன்கனிக் கோட்டை அருகே உள்ள தொட்ட திம்மன அள்ளி பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது18). இவருக்கு திருமணம் செய்ய வீட்டில் வரன் பார்த்து உள்ளனர். ஆனால் சரண்யாவுக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை.

இதனால் மனவரக்தியில் இருந்த சரண்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதை அறிந்த இவருடைய பெற்றோர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News