உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் போட்டிகள்- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

Published On 2022-08-17 08:49 GMT   |   Update On 2022-08-17 08:49 GMT
  • கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அங்கன்வாடி மையத்தில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.
  • போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினரும், பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அங்கன்வாடி மையத்தில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினரும், பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் லவராஜா, மன்ற தலைவர் முருகன், சேர்முகச்சாமி, பாஸ்கர், ஆனந்த், சபீனா, வைரவசாமி, ஜெயமாரியப்பன், கணபதி, சிலம்பம் ஆசிரியர் சோலை நாராயணன், தினேஷ், கனக லட்சுமி, சதீஷ் உள்ளிட்ட பலர் கலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News