உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
- மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கினார்.
- திருடு போன மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என், நகரில் வசித்து வருபவர் செல்வராசு (வயது 33). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கினார். அதிகாலை எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து செல்வராசு கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்.