உள்ளூர் செய்திகள்
போலீஸ் நிலையம் எதிரில் கையை பிளேடால் கிழித்துக் கொண்ட ரவுடிபண்ருட்டி அருகே பரபரப்பு
- அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
- மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார்.
கடலூர்:
காடாம்புலியூர் பேர்பெரியான்குப்பம் கந்தன் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (வயது 23) ரவுடி. அப்பகுதியில் நடைபெற்ற திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசா ரிடம் வாக்குவாதம் செய்த அசோக்குமார், தான் வைத்திருந்த பிளேடால் கையை கிழித்து க்கொண்டார். சந்தேகத்தின் பேரில் என்னை கைது செய்ய துடிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையம் முன்பு நின்று கூச்சலிட்டார். மேலும், பிளேடால் மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின் அசோக்கு மாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.