உள்ளூர் செய்திகள்
கடலூரில் நண்பரை மது பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது
- ஆத்திரமடைந்த தணிகாசலம் தனது நண்பர் ரகுநாத்தை பீர் பாட்டில்களால் தாக்கினார்.
- காயம் அடைந்த ரகுநாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடலூர்:
பண்ருட்டியை சேர்ந்தவர் ரகுநாத் (வயது 40). இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர் தணிகாச்சலம் என்பவருடன் புதுவை மாநிலம் குருவி நத்தத்தில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு, புதுவை மாநில பகுதியில் மது வாங்கிக் கொண்டுவந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே மது அருந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குள் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த தணிகாசலம் தனது நண்பர் ரகுநாத்தை பீர் பாட்டில்களால் தாக்கினார். இதில் காயம் அடைந்த ரகுநாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ரகுநாத் கொடுத்த புகாரின் பேரில் தணிகாசலம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.