உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம் செய்த காட்சி. 

கடலூரில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

Published On 2022-09-20 08:08 GMT   |   Update On 2022-09-20 08:08 GMT
  • கடலூரில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • மாவட்ட செயலாளர் பழநி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

கடலூர்:

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் மாவட்டம் சார்பாக 01.01.2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படி நிலுவை தொகையினை வழங்க வேண்டும். 1.07.2022 முதல் மருத்துவ காப்பீட்டு சந்தா தொகை 497 ரூபாயாக உயர்த்தியதை ரத்து செய்து 350 ரூபாயாக குறைத்திடவேண்டும். கொரோனா சிகிச்சை கட்டணம் செலவுத் தொகையை உடன் திரும்ப வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனக்காவலர்கள், கிராமபுற நூலகர்களுக்கு ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் கடலூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். வட்டக்கிளை நிர்வாகிகள் ராமதாஸ் , அன்பழகன், முத்தமிழ்ச்செல்வி, பன்னீர்செல்வன் ,செல்வராஜ், குமாரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இணைச் செயலாளர் பாலு, பச்சையப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பழநி கோரிக்கைகளை விளக்கி பேசினார் . ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை ஓய்வூதியர் சங்க பூண்டியாங்குப்பம் சாம்பசிவம், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் தேவராஜ் வோளண்மை அனைத்து ஊழியர் சங்க மாவட்டத் தவைர் சுந்தரமூர்த்தி, மாவட்ட தவைர்சிவராமன், பொதுச் செயலாளர் மருதவானன், இந்து சமய அறயநிலைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சுப்ரமணியம் அலுலக உதவியாளர் அலுவலக பணியாளர் ஓய்வூதியர் சங்கம் மாவட்டத் தலைவர் பக்தவச்சலம், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆதவன், ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் கருணாகரன் , சிவப்பிரகாசம் , கலியமூர்த்தி , பத்பநாபன், ராமனுஜம் , ஞானமணி . சிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சி.குழந்தைவேலு நன்றி கூறினார். 

Tags:    

Similar News