உள்ளூர் செய்திகள்

சேத்தியாத்தோப்பில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-08-08 08:33 GMT   |   Update On 2022-08-08 08:33 GMT
  • சேத்தியாத்தோப்பில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் அங்கு நின்று ெகாண்டிருந்தார்.

கடலூர்:

சேத்தியாதோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி. ரூபன் குமார் உத்தரவின் பேரில் குற்ற பிரிவு தனிப்படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் மற்றும் போலீசார் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் அங்கு நின்று ெகாண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பேசினார். இதை தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் புவனகிரி அருகே சீயப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முரளிதரன் (வயது 20) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, முரளிதரனையும் கைது செய்தனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

Tags:    

Similar News