உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஐ.ஜே.கே. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் ஐ.ஜே.கே. சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-23 09:24 GMT   |   Update On 2022-06-23 09:24 GMT
  • கள்ளக்குறிச்சியில் ஐ.ஜே.கே. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், ஆன்லைன் ரம்மி, ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

 கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில முதன்மை அமைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பழனிசாமி, மாநில விவசாய அணி செயலாளர் சபா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், ஆன்லைன் ரம்மி, ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது நூதன முறையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இருந்தது. தொடர்ந்து நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஜெகநாதன், விழுப்புரம் மாவட்ட தலைவர் செந்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் கணேசன்உள்ளிட்ட நிர்வாகிகள்மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News