உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகரில் வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண் மீது தாக்குதல்

Published On 2023-08-17 14:45 IST   |   Update On 2023-08-17 14:45:00 IST
  • ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.
  • நுழைந்து மனைவி சரிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கடலூர்:

கடலூர் முதுநகரை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய சகோதரர் சிவசங்கர். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிவசங்கர் திடீரென்று முனுசாமி வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து மனைவி சரிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சரிதா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் . கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனர்.

Tags:    

Similar News