உள்ளூர் செய்திகள்

தறிகெட்டு ஓடிய கார் மோதி 4 பேர் பலியான விபத்தில் நெஞ்சை உருக்கும் தகவல்கள்

Published On 2022-08-06 13:39 IST   |   Update On 2022-08-06 13:39:00 IST
  • கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் ஒன்று மோதி நின்றது.
  • சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாயினர்.

 கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட பர்கூர் அருகில் உள்ள சின்னபர்கூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன்(38). இவர் கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுங்சாலையில் பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளி அருகே உள்ள மேல்கொட்டாய் பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார்.

இவரது நண்பர்களாக சின்னபர்கூர் ரோடு பகுதியை சேர்ந்த பாக்யராஜ்(40), பர்கூர் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த சுஜீத்குமார்(39), நேரு நகரை சேர்ந்த கண்டவீரவேல்(35) ஆகியோர் மாலை நேரத்தில் ஜெகதீசன் டீ கடைக்கு சென்று, அங்கிருந்து கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்க மாக வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இவர்கள் 4 பேரும் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அங்கிநாயனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்று கொண்டி ருந்துள்ளனர். அப்போது வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் ஒன்று தறிகெட்டு ஓடி, நடைபயிற்சி மேற்கொண்டிருந்த இவர்கள் 4 பேர் மீதும் மோதி, சாலையோரம் உள்ள பள்ளத்தில் நின்றது. இதில் பாக்யராஜ், சுஜீத்குமார், கண்டவீரவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாயினர்.

படுகாயம் அடைந்த ஜெகதீசனை அங்கிருந்த வர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் வழி யிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓசூர் மூக்காண்டப்பள்ளியை சேர்ந்த தணிகைமலை(40) என்பவர் ஓட்டி வந்ததும், அவர் பெங்களூர் ஏர்போர்ட்டிற்கு வந்தவர்களை அழைத்து வர வேலூரில் இருந்து சென்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தணிகை வேலை கைது செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பாக்யராஜ் உள்ளிட்ட 4 பேரும் எப்போதுமே ஒன்றாகவே நடைப்பயிற்சி செல்வார்களாம்.இந்த கோர விபத்து சாவிலும் அவர்களை ஒன்றாக மரணிக்க வைத்துவிட்டது என்று அவர்களது உறவினர்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News