உள்ளூர் செய்திகள்

கடலூரில் இந்து முன்னணியினர் போராட்டம்: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

Published On 2023-09-07 14:37 IST   |   Update On 2023-09-07 14:37:00 IST
  • தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தனர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்தனர்.

கடலூர்:

இந்து முன்னணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன் வரவேற்றார். வெங்கடேசன், பெருமாள், மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் சனில் குமார் கலந்து கொண்டு கண்ட உரை ஆற்றினார். அப்போது கடலூர் புதுநகர் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். அப்போது இந்து முன்னணியிருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்தனர்.

Tags:    

Similar News