உள்ளூர் செய்திகள்

புவனகிரி பகுதியில் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2022-09-30 06:52 GMT   |   Update On 2022-09-30 08:43 GMT
  • அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
  • பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பஸ்கள் இயக்க உத்தரவிடப்படும்.

கடலூர்:

புவனகிரி பகுதியில் போக்குவரத்து நெரிச்சலால் மாணவ -மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் சரியாக வாகனத்தை ஓட்டி செல்ல முடியாமலும் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் சமூக ஆர்வலரான கனகராஜ் தலைமையில் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தாங்கள் கூறியது போல் அதன் அடிப்படையில் நாங்கள் அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் விரைந்து நோட்டீஸ் அனுப்பி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில் கூறியதாவது:-

அனைத்து வர்த்தக வியாபாரிகளும் அவரவர்கள் கடைக்கு முன்பு செய்துள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக செப்டம்பர் 23 க்குள் பிரித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் செப்டம்பர் 24 ஆம் தேதி நாங்கள் இயந்திரம் மூலம் அகற்றி விடுவோம் அதற்குரிய செலவின தொகையை தங்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இதனால் வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஒரு சிலர் மட்டும் தன்னுடைய கடைகளில் ஆக்கிரம்புகளை அகற்றி உள்ளார். தற்பொழுது வரும் தீபாவளி பண்டிகை தமிழக அரசு பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பஸ்கள் இயக்க உத்தரவிடப்படும்.

இதனை ஒட்டி ஏராளமான போக்குவரத்துகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவார்கள் ஆகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது பிள்ளைகளை மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு வந்து மளிகை பொருட்கள் புது ஆடைகள் பட்டாசுகள் வாங்குவதற்கு இரு சக்கர வாகனங்களில் வந்து வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் சாலை ஓரத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை நேரிடும். அந்தப் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தமிழக அரசு அதிரடியாக ஏராளமான ஊர்களில் பெரிய அளவிற்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கூட இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. ஆனால் புவனகிரி பகுதியில் மட்டும் ஏன் ஆக்கிரம்புகள் அகற்றப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News