உள்ளூர் செய்திகள்

குன்னூரில் கனமழை எதிரொலி- மலைப்பாதையில் திடீர் மண்சரிவு

Published On 2023-11-03 08:58 GMT   |   Update On 2023-11-03 08:58 GMT
  • கரோலினா பகுதியில் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
  • அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள ஒரு சில இடங்களில் லேசான மண்சரிவு, மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் குன்னூர் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட கரோலினா பகுதியில் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது.இதனால் அந்த வழியாக செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. அங்கு கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News