உள்ளூர் செய்திகள்

பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சுகாதார ஆய்வாளர் 'சஸ்பெண்டு'- நெல்லை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

Published On 2023-08-21 09:02 GMT   |   Update On 2023-08-21 09:02 GMT
  • நெல்லையில் உள்ள 4 மண்டலங்களிலும் இருந்து தினந்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
  • குப்பை கிடங்கில் பற்றிய தீயை 5 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி டவுன், தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களை உள்ளடக்கியது. இந்த 4 மண்டலங்களிலும் இருந்து தினந்தோறும் 100 டன்னுக்கும் மேலாக மட்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

தீ விபத்து

இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், புகை மூட்டம் ஏற்பட்டு சங்கரன்கோவில் சாலை யில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சிரமம் ஏற்படும். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அதனை 5 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். அந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டார்.

ஆய்வாளர் சஸ்பெண்டு

இந்நிலையில் தீ விபத்து நடந்த சில நாட்களில் அந்த பகுதி மேஸ்திரி பெருமாள் என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

இந்தநிலையில் தற்போது பேட்டை பகுதி சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன்(வயது 52) சஸ்பெண்டு செய்யப்ப ட்டுள்ளார். பணி யில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி அவர் சஸ்பெண்டு செய்ய ப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News