உள்ளூர் செய்திகள்

கோவிந்தா... கோபாலா... பக்தி கோஷத்துடன் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்

Published On 2025-02-26 10:56 IST   |   Update On 2025-02-26 10:56:00 IST
  • 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.
  • கையில் விசிறியுடன், இடுப்பில் திருநீற்று பையுடன் ஓடி வந்தனர்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.

திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல் குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில், பன்றிபாகம் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்டனர். காவி உடை அணிந்து கையில் விசிறியுடன், இடுப்பில் திருநீற்று பையுடன் ஓடி வந்தனர். பெரியவர்கள் மட்டு மின்றி குழந்தைகளும் ஏராளமானோர் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர். இதை யடுத்து 12 சிவாலயங்களிலும் கூட்டம் அலைமோதியது.


குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இருசக்கர வாகனங்களிலும், வேன்களிலும் சென்று தரிசனம் செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக சென்றும், ஓடி சென்றும் தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு வழிநெடு கிலும் குளிர்பானங்கள், உணவு வகைகள் வழங்கப்பட்டது. சிவராத்திரியை யொட்டி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து 12 சிவாலயங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்ட பெரும் பாலான பக்தர்கள் இன்றிரவு சிவாலயங்களில் தங்கி கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.

அனைத்து சிவாலயங்க ளிலும் இன்று இரவு விடிய விடிய பூஜைகளும் நடைபெறும். சிவராத்திரியை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 12 சிவாலயங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பக்தர்கள் இரவில் பயணம் செய்யும்போது அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கைப்பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஓட்டி அனுப்பினார்கள்.

சிவராத்திரியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் விழாகோலம் பூண்டிருந்தது. நாகர்கோவில் கோதை கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித் தது.

இன்று காலையில் நிர்மால்ய தரிசனமும், 10 மணிக்கு நறுமண பொருட் களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமியும், அம்பா ளும் திருத்தேரில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதேபோல் வடசேரி தழுவிய மகாதேவர் கோவில், சோழராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உள்பட அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News