உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தது.

நாகூரில், பொது மருத்துவ முகாம்

Published On 2023-08-17 09:27 GMT   |   Update On 2023-08-17 09:27 GMT
  • 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வந்து சிகிச்சை அளித்தனர்.
  • முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, நாகூரில் ஆயுர்வேத மருத்துவ முகாம்ம னசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் டாக்டர் ஆர் வெங்கடசுப்பிரமணியன் ஆயுர்வேத மருத்துவர் இணைந்து இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாம், நாகூர் - தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிறு வனத் தலைவர் சம்பத்கு மார் வரவேற்றார். இந்நிக ழ்ச்சியில்,தலைமை சட்ட ஆலோசகர் வைரவநாதன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் நாகை மாலி எம்.எல்.ஏ. மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் நிஜாமுதீன், நாகப்பட்டினம் நகராட்சி நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி . செய்யது முகமது காஜி ஹீசைன் சாகிப் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். வெங்கட சுப்பி ரமணியன் தலைமையில்,10 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ரூபாய் 2 லட்சத்துக்கான மெடிசின்கள் (டானிக், மாத்திரைகள்) இம்மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

இதில்,அறங்காவலர்கள் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News