உள்ளூர் செய்திகள்
- கஞ்சா விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை குடிநீர் தொட்டி அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மயிலாடுதுறை அருகே சித்தர்காடு மெயின் ரோட்டை சேர்ந்த செல்லதுரை மகன் அரவிந்தன் (வயது 22) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.