உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் இலவச மருத்துவமுகாம்

Published On 2023-07-01 09:12 GMT   |   Update On 2023-07-01 09:13 GMT
  • இதில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
  • சித்த மருத்துவம் மூலமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அரவேணு,

கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

இதில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு முகாமுக்கு வந்தவர்களுக்கு அனைத்து வகை நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து-மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதுதவிர பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை நடத்தப்பட்டு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதுதவிர சித்த மருத்துவம் மூலமும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கோத்தகிரி சிறப்பு மருத்துவ முகாமில் வட்டார பொது சுகாதார மருத்துவர் ராஜேஷ், மாவட்ட துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் குமாரசுவாமி, பிரேம்குமார், அசோக்குமார், குமாரசாமி, சிவா, குமார், பிரசாத் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோத்தகிரி சிறப்பு முகாமை சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத் தலைவர் உமாநாத் போஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News