உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தது.

இலவச மருத்துவ முகாம்

Published On 2023-07-17 09:27 GMT   |   Update On 2023-07-17 09:27 GMT
  • பொதுமக்களுக்கு ஈ.சி.ஜி. மற்றும் பொது மருத்துவம் அளிக்கப்பட்டது.
  • 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்ட வன் முன்னிலை வைத்தார் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல்,இரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்தக்கொதிப்புக்கான சிகிச்சைகள், தைரா ய்டு,ஆஸ்துமா, சுவாசக் கோளாறு சிகிச்சைகள், தலைவலி, உடல் வலி,காய்ச்சலுக்கான சிகிச்சைகள், உடல் பருமன் அளவீடு, ஈசிஜி மற்றும் பொது மருத்துவம் செய்யப்பட்டது.

இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன்,ஒன்றிய பொறியாளர் செந்தில், ஒன்றிய குழு உறுப்பினர் பேபிசரளா பக்கிரிசாமி,ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் திருப்புகலூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News