உள்ளூர் செய்திகள்

ஓசூரில் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு தேர்வான பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-10-27 15:06 IST   |   Update On 2022-10-27 15:06:00 IST
  • வீடுகளுக்கு பயனாளிகளை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடைபெற்றது.
  • 30 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி, ராயக்கோட்டை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் காலியாக உள்ள வீடுகளுக்கு பயனாளிகளை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடைபெற்றது. இதில் 30 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பயனாளிக்கான ஆணை கள் வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதி வாரிய அலுவலர் பாலமுரளிதரன், மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News