உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு பேசினார்.

உணவு பாதுகாப்பு குழு கூட்டம்

Published On 2022-08-04 09:13 GMT   |   Update On 2022-08-04 09:13 GMT
  • செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்க கூட்டம் வர்த்தக சங்கத் தலைவா் தென்னரசு தலைமையில் நடந்தது.
  • உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோனி, அன்பழகன் ஆகியோர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் வர்த்தக சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேதாரண்யம் வர்த்தக சங்கம் இணைந்து செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கக் கூட்டம் வர்த்தக சங்கத் தலைவா் தென்னரசு தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் சுபஹானி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் வேதநாயகம் வாழ்த்துரை வழங்கினார். நாகை மாவட்ட நியமன அலுவலா் டாக்டர் புஷ்பராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் எப்.எஸ்.எஸ்.ஐ டெக்னிக்கல் ஆலோசகர் செய்யது அகமது, உணவுபாதுகா ப்பு ஆலோசகர் ஜெகதீ ஸ்வரி ஆகியோர் விளக்க வுரையாற்றினர். ஜி.டி.பி அலுவலா் சித்ரா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோனி, அன்பழகன் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.

மேலும் கூட்டத்தில் வர்த்தக சங்க துணைத் தலைவா் சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் தங்கதுரை, தமிழழகன் உட்பட செயற்குழுஉறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளா் சீனி வாசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News