உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட மனோகரன்.

பைனான்சியர் வெட்டிக்கொலை

Published On 2022-08-18 08:15 GMT   |   Update On 2022-08-18 08:15 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
  • பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் தெற்குபொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது 40) என்பவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த நண்பருடன் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மணி வேலுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்த நாகை போலீஸ் சூப்பிரண்ட் ஜவகர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News