உள்ளூர் செய்திகள்
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி
- 6 மாணவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரத்து 600 வீதம் ரூ. 21 ஆயிரத்து 600 ஐ உதவி தொகையாக வழங்கினார்.
- ஆசிரியர் ஆதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்ஆசிரியர்கள் இளஞ்செழியன், தியாகராஜன், நாகராஜன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ராஜாஜிகாட்டை சேர்ந்த கோவிந்தராஜ் உயர்கல்வி பயின்று வரும் 6 மாணவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரத்து 600 வீதம் ரூ. 21 ஆயிரத்து 600 ஐ உதவித் தொகையாக வழங்கினார். மாணவர்களின் சார்பில் சீகரன் ஏற்புரை வழங்கினார். ஆசிரியர் ஆதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார், அரங்க சுப்பிரமணியன் நன்றி கூறினார்.