உள்ளூர் செய்திகள்

விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த யானை

Published On 2024-01-29 10:37 IST   |   Update On 2024-01-29 10:37:00 IST
  • கடந்த 1 மாதத்தில் 20 பனை மரங்கள், 23 தென்னை மரங்கள், 15 வாழைகளை யானை சாய்த்துள்ளது.
  • ஒற்றை யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் காட்டு பத்து, மேலகாடு பகுதிகளில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இடம் பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் முகாமிட்டு தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது.

பகலில் மலையடி வார புதர்களில் தஞ்சமடையும் யானை இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, பனை, வாழை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்வதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

கடந்த 1 மாதத்தில் 20 பனை மரங்கள், 23 தென்னை மரங்கள், 15 வாழைகளை யானை சாய்த்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல்லாயிரக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றை யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. எனவே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, விவசாயிகளை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டவும், நாசமான வாழை, தென்னை, பனை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News